Home Local பிளவுப்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சி

பிளவுப்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சி

0

இலங்கை தமிழரசுக் கட்சின் சில உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக தெரிவித்ததை அடுத்து அக்கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் தமது கட்சி தீர்மானிக்கவில்லை எனவும், ஒருசிலரின் கருத்து அக்கட்சியின் உத்தியோகபூர்வ கருத்து அல்ல எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் ஒரு சிலரின் செயலால் கட்சி பிளவுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறானதொரு கட்சியின் கூட்டம் நடத்தப்படும் என தமக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சிறீதரன் உட்பட கட்சியின் பெரும்பான்மையானோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

Previous articleஇரண்டு வருடங்களில் வரிச் சுமையைக் குறைக்க உத்தேசம் – ஜனாதிபதி
Next articleமக்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டதாலேயே எனது உடற்பருமன் அதிகரித்துள்ளது – கலாநிதி ஹரிணி அமரசூரிய

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here