Home Uncategorized விமான நிலையத்திற்கு A/C பஸ் வேண்டாம் – தொழிற்சங்கமொன்று போராட்டம்

விமான நிலையத்திற்கு A/C பஸ் வேண்டாம் – தொழிற்சங்கமொன்று போராட்டம்

0

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கோட்டை பிரதான புகையிரத நிலையம் மற்றும் மகும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையம் வரை ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய அதி சொகுசு பஸ் சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலையத்தில் இருந்து கொழும்பு வரை இயங்கும் சொகுசு பஸ் சங்கம் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளது.

தமது சங்கத்தில் 71 சொகுசு பஸ்கள் பதிவு செய்யப்பட்ட போதிலும் அவற்றில் 42 பஸ்கள் நாளாந்தம் இயங்குவதில்லை என தெரிவித்த இந்திக்க குணசேகர, பதிவு செய்யப்பட்ட பஸ்கள் மாதம் 10 நாட்கள் மட்டுமே இயங்குவதாகவும் சுட்டிக்காட்டினார்.

தமது சங்கத்தின் பஸ்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்ததாகவும், அதன் பின்னர் பாதுகாப்புக் காரணங்களாலும் ஏனைய அரசியல் அழுத்தங்களாலும் அவரிவத்தை நகரிலிருந்து பயணத்தை ஆரம்பிக்க நேரிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமது பஸ் சங்கம் இந்த பிரச்சினையை ஏற்கனவே ஜனாதிபதி மற்றும் இத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாகவும், இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால், நாளையதினம் நீர்கொழும்பு பாதை வரை தமது பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Previous articleஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் மேலும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள்
Next articleதூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுவிக்க தயாராகும் வேட்பாளர்களை ஊடகங்கள் வளர்த்து வருகின்றன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here