Home Local 2024இற்கான ‘சிறந்த சுற்றுலா வாரியம்’ விருதை வென்றது இலங்கை

2024இற்கான ‘சிறந்த சுற்றுலா வாரியம்’ விருதை வென்றது இலங்கை

0

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் (SLTPB) நேற்று ஒகஸ்ட் 02, 2024 இந்தியாவின் புது டில்லியில் நடைபெற்ற உலகளாவிய சுற்றுலா விருதுகள் 2024 இல் “சிறந்த சர்வதேச சுற்றுலா வாரியம்” என்ற விருதை வென்றது.

குளோபல் டூரிசம் விருதுகள் என்பது டிரெவல் வேல்ட் ஒன்லைனால் (TWO) ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்திர நிகழ்வாகும், இது சுற்றுலாத் துறையின் நிலப்பரப்பை வடிவமைத்து நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதில் சிறந்த பங்களிப்பைச் செய்த நிறுவனங்களை கௌரவிப்பதற்கும் கொண்டாடுவதற்கும் ஒரு தளமாக செயல்படுகிறது.

இந்த விருது நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொண்ட சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் பிரசன்னத்துடன் SLTPB தலைவர் சாலக கஜபாகு.. இந்த விருது குறித்து கருத்து தெரிவிக்கையில்,

SLTPB முகாமைத்துவப் பணிப்பாளர் திரு .நளின் பெரேரா , “இலங்கையை உலகிற்கு சிறந்த ஒன்றாகக் காண்பிப்பதில் அதன் அர்ப்பணிப்பையும் அர்ப்பணிப்பையும் கருத்திற்கொண்டு இந்த மதிப்புமிக்க விருதுக்கு இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தை தெரிவு செய்ததற்காக ஜூரிக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்“ எனவும்.

இலங்கைக்கு விஜயம் செய்த பல்வேறு ஊடக வெளியீடுகள் மற்றும் பயண செல்வாக்கு செலுத்துபவர்களிடமிருந்து அண்மைக் காலங்களில் இலங்கை சுற்றுலாத்துறைக்கு கிடைத்த பல பாராட்டுக்கள் மற்றும் சர்வதேச அங்கீகாரங்களும் இந்த மதிப்புமிக்க தருணத்திற்கு பங்களித்திருக்கும் என்று அவர் மேலும் கூறினார். இந்த வெற்றிக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் அனைத்து பயணத்துறை பங்குதாரர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

 

Previous articleஇடைநிறுத்தப்பட்ட 13 திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க ஜப்பான் தயார்
Next articleதயாசிறி தரப்பினர் சஜித்திற்கு ஆதரவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here