Home Local ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பு குறித்து ஜனாதிபதியினால் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு

ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பு குறித்து ஜனாதிபதியினால் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு

0

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களினது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களினதும் முன்னாள் ஜனாதிபதிகளினதும் பிரத்தியேக பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்காக குழுவொன்றை நியமிக்கமாறு இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அத்தகைய சகல பாதுகாப்பு நடவடிக்கைகளையும் ஒருங்கிணைப்பதற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிப்பதற்கு பரிந்துரைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Previous articleமுதலாளிமார் சம்மேளனம் உறுதியளித்த 1350 ரூபா சம்பளத்தை ஏற்க முடியாது – செந்தில் தொண்டமான்
Next articleகொழும்பு அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் 50,000 குடும்பங்களுக்கு உறுதிப் பத்திரங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here