Home Business ரணில் கொண்டு வந்த மத்திய வங்கி சட்டத்தை எதிர்த்தாலும், அதை மாற்றப் போவதில்லை – அநுரகுமார

ரணில் கொண்டு வந்த மத்திய வங்கி சட்டத்தை எதிர்த்தாலும், அதை மாற்றப் போவதில்லை – அநுரகுமார

0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கொண்டுவரப்பட்ட மத்திய வங்கிச் சட்டத்திற்கு தேசிய மக்கள் சக்தி எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், அதனை மாற்றப் போவதில்லை என அதன் தலைவர் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மேலும் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

“மத்திய வங்கி சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். அதுபற்றி எந்த விவாதமும் இல்லை. ஆனால் நெருக்கடி ஏற்படும் போது மத்திய வங்கியும் கருவூலமும் இணைந்து நெருக்கடியில் இருந்து வெளிவர ஒரு கூட்டு நடவடிக்கைக்கு வர வேண்டும். மத்திய வங்கி சட்டத்தை மாற்ற நாங்கள் எதிர்பார்க்கவில்லை. பணவீக்கம், வங்கி வட்டி விகிதங்கள் மற்றும் மத்திய வங்கிக்கு ஒதுக்கப்பட்டுள்ள டொலரின் மதிப்பு போன்ற காரணிகளால் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய வங்கி கவனம் செலுத்த வேண்டும். நாம் மிகவும் நம்பிக்கையான பொருளாதாரத்தை அடைந்த பிறகு, அது சந்தை தரவுகளின் அடிப்படையில் நகரலாம். அதுவரை மத்திய வங்கிக்கும் கருவூலத்திற்கும் இடையிலான கூட்டு நடவடிக்கை தேவை. மத்திய வங்கி சுதந்திரமாக இருப்பது நல்லது என்பதை ஒப்புக்கொள்கிறேன். சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து வெளியேற்றுவதற்காக நாங்கள் செயல்படவில்லை.

Previous articleபொருளாதாரம் வளர்ச்சியடைந்து, வரி வருமானம் அதிகரித்து வருகிறது. அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் – அனுரகுமார திஸாநாயக்க
Next articleஇப்போது மாற்று வழிகள் இல்லை – IMF மாத்திரமே உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here