Home Local எந்த வேட்பாளருக்கும் தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை – கத்தோலிக்க திருச்சபை

எந்த வேட்பாளருக்கும் தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை – கத்தோலிக்க திருச்சபை

0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற எந்த வேட்பாளருக்கும் தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை” என இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது.

இது குறித்து கொழும்பு பேராயரின் ஊடகப் பேச்சாளர் சிறில்காமினி பெர்ணாண்டோ கருத்துத் தெரிவிக்கையில்” ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை நாம் சந்தித்துள்ள போதிலும் எந்த வேட்பாளருக்கும் ஆதரவை வெளியிடப்போவதில்லை.

நாட்டின் புதிய ஜனாதிபதியை மக்களே தீர்மானிக்க வேண்டும். நாம் நாட்டிலுள்ள கத்தோலிக்க மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவே ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தோம்” இவ்வாறு சிறில்காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரேமதாச, ஜேவிபியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார, பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச உட்பட மேலும் பல ஜனாதிபதி வேட்பாளர்கள் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Previous articleவரி நிலுவையை வசூலிப்பதற்காக 900 வங்கிக் கணக்குகள் முடக்கம்
Next articleவடக்கு கிழக்கு இன்னும் சரியான அபிவிருத்தியை நோக்கி செல்லவில்லை – சஜித்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here