Home Local தபால் மூல வாக்குச் சீட்டுகள் அடங்கிய பொதிகளை ஏற்கும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்

தபால் மூல வாக்குச் சீட்டுகள் அடங்கிய பொதிகளை ஏற்கும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்

0

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களர்களுக்கு முகவரியிடப்பட்ட பதிவு செய்யப்பட்ட தபால் மூல வாக்குச் சீட்டுகள் அடங்கிய பாதுகாக்கப்பட்ட பொதிகளை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (26) முதல் ஆரம்பமாகவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், வாக்காளர் அட்டை விநியோகம் செப்டம்பர் 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்றும், செப்டம்பர் 8 ஆம் திகதி அதற்கான சிறப்பு நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் காரணமாக ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் இரத்துச் செய்யப்படுவதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.

எவரேனும் அத்தியாவசிய காரணங்களுக்காக விடுமுறை எடுக்க வேண்டுமாயின், மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதி தபால் மா அதிபரின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Previous articleசமூக ஊடகங்களில் நடத்தப்படும் ஜனாதிபதித் தேர்தல் கருத்துக் கணிப்புகளை நிறுத்த நடவடிக்கை
Next articleவரி நிலுவையை வசூலிப்பதற்காக 900 வங்கிக் கணக்குகள் முடக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here