Home Political பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார் தலதா

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார் தலதா

0

இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்

பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை விடுத்த அவர் , இரத்தினபுரி மாவட்ட மக்கள் தனக்களித்த ஆதரவுக்காக நன்றியையும் தெரிவித்தார்.

ரணிலும் சஜித்தும் இணைந்து நாட்டை முன்னேற்றக்கூடிய ஒரு திட்டத்தை தான் உட்பட்ட தரப்பு முன்வைத்தபோதும் அது சாத்தியப்படாமை குறித்து தனது உரையில் கவலை வெளியிட்டார்

சஜித் ஆட்சிக்கு வந்தால் கோட்டாவின் ஆட்சியை போன்றதாகி விடுமென்றும் தலதா தனது உரையில் குறிப்பிட்டதுடன் கோட்டாவின் ஆட்சி எப்படி வீழ்ந்தது என்பதை சஜித் அறியமுயலவேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

மேலும் சஜித் பிரேமதாச தனது அரசியல் எதிர்காலத்திற்காக இன்னும் ஐந்து வருடங்கள் பொறுமை காத்திருந்தால் இந்த சவாலை நாம் எதிர்கொண்டிருக்க மாட்டோம் எனவும் , உங்களை இந்த பாதாளத்திற்கு தள்ளுபவர்கள், அடுத்த முறை பாராளுமன்றத்திற்குள் நுழையவே விரும்புகிறார்கள், அவர்கள் உங்களை ஜனாதிபதியாக்க விரும்பவில்லை என தான சஜித்திடம் கூறுவதாகவும் தலதா அத்துகோரள குறிப்பிட்டுள்ளார்.

Previous articleஅமைதியை நிலைநாட்டுவதற்கு அநுரவின் திட்டம்
Next articleவந்து செய்வேன் என கூறும் தலைவரை விட செய்து காட்டிய தலைவரே சிறந்தவர் – காஞ்சன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here