Home Local சஜித்தின் தேர்தல் பிரச்சார செயற்பாடுகளை கண்காணிக்கும் ஜலனி

சஜித்தின் தேர்தல் பிரச்சார செயற்பாடுகளை கண்காணிக்கும் ஜலனி

0

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசார செயற்பாடுகளை கண்காணிக்கும் பொறுப்பை திருமதி ஜலனி பிரேமதாச ஏற்றுக்கொண்டுள்ளதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்ட ஒவ்வொரு செயற்பாடுகளும் அவரால் முழுமையாக கண்காணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியில் அவ்வாறு கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் முகாமைத்துவ திறன்கொண்ட எவரும் இல்லாமையினாலேயே சஜித் பிரேமதாசவின் மனைவியான ஜலனி பிரேமதாசவினால் இந்த பொறுப்பு ஏற்றுகொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி எதிர்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் திட்டமிட்டுள்ள வேலைத்திட்டங்களை தொகுதிவாரியாக நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஸ்ரீ சுகத சாசன பிரசாதினி கெளரவ விருதைப் பெற்றுள்ள டி ஜலானி பிரேமதாச, இந்நாட்டின் மிகவும் எளிமையான பெண் என நீண்டகாலமாக மக்களால் அங்கீகரிக்கப்பட்டவர்.

Previous articleஇலங்கையில் அதிகரிக்கும் வௌிநாட்டு வருமானம்
Next articleதோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் – சம்பள நிர்ணய சபை உறுதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here