Home Local ஹிருணிகாவின் பிணை மனு ஒத்திவைப்பு

ஹிருணிகாவின் பிணை மனு ஒத்திவைப்பு

0

மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் பிணை மனு கோரிக்கைக்கு சட்டமா அதிபர் திணைக்கள்ம் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.

ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்குமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு ஆட்சேபனை மனுக்களை தாக்கல் செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

இந்த பிணை கோரிக்கை இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது. ஹிருணிகா பிரேமச்சந்திரவின் தரப்பில் முன்நிலையான சட்டத்திரணியால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பாக ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க சட்டமா அதிபர் எதிர்பார்ப்பதாக அரசாங்க சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார்.

அத்துடன் எழுத்து மூலம் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்காக குறித்த வழக்கை ஒத்திவைக்குமாறும் அரசாங்க சட்டத்தரணி மன்றில் கோரிக்கை முன்வைத்தார்.

இதன்படி, சட்டமா அதிபருக்கு ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க அனுமதித்த உயர் நீதிமன்ற நீதிபதி, பிணை கோரிக்கையை எதிர்வரும் 11ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறும் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஊழியர் சேமலாப நிதிச் சட்டத்தில் திருத்தம்
Next articleகெஹலிய குடும்பத்தின் 09 கோடி வைப்புத் தொகைக்கு தடை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here