Site icon Newshub Tamil

மீண்டும் நீண்ட வரிசை

ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 24 மணித்தியாலங்கள் எஞ்சியுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நாடு முழுவதும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மீளாய்வு அடுத்த வாரம் வழங்கப்படும், அதன்படி அடுத்த கடன் தவணை IMF மூலம் வழங்கப்படும்.

ஆனால் இம்முறை ஆட்சியில் இருப்பதாகக் கூறும் பல வேட்பாளர்கள் தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதாகக் கூறியுள்ளனர்.

இதனால் எதிர்காலத்தில் டொலரின் பெறுமதி உயரும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதுடன், இதன்காரணமாக பொருட்களின் விலை அதிகரிக்கலாம் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதுடன் நாடு முழுவதும் நீண்ட வரிசைகளையும் காணக்கூடியதாக உள்ளது.

இரண்டு ஆண்டுகளாக நீடித்து வந்த பொருளாதார, சமூக அரசியல் ஸ்திரத்தன்மை குலைந்து விடும் என்று சந்தேகத்தில் மீண்டும் ஒரு வரிசை யுகம் என்பது வருத்தமளிக்கும் ஒரு விடயமாகும்.

Exit mobile version