Site icon Newshub Tamil

தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் சிலர் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தலாம் – அருந்திக

ஜனாதிபதித் தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் தோல்வியின் பின்னர் நாட்டில் மீண்டும் குழப்பமான சூழ்நிலையை உருவாக்க சிலர் தயாராகி வருவதாகவும், இந்த நிலைமையை தோற்கடிக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்நாட்டு இளைஞர்களை மூளைச் சலவை செய்யும் இந்தச் செயற்பாடு தடுக்கப்பட வேண்டுமெனவும், அந்த மக்கள் ஆட்சிக்கு வருவதைத் தடுப்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் அருந்திக தெரிவித்தார்.

அத்துடன், இந்த புனிதமற்ற கூட்டணியை தோற்கடிக்க ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுமாறு எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று முதல் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Exit mobile version