Site icon Newshub Tamil

வரிசையில் நின்ற எமக்கு ரணிலே நிவாரணம் வழங்கினார் –  பிரதான முச்சக்கரவண்டி சங்கங்கள் ரணிலுக்கு ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமது பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக இலங்கையின் நான்கு பிரதான முச்சக்கரவண்டி சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம், தேசிய Taxi app முச்சக்கரவண்டி தொழில் வல்லுநர்கள் சங்கம், ஐக்கிய பயணிகள் போக்குவரத்து சேவை வல்லுநர்கள் சங்கம், மேல் மாகாண முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் கூட்டுறவு சங்கம் என்பன ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க ஒன்றிணைந்துள்ளன.

அந்த சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 1000 பிரதிநிதிகள் இன்று (04) காலை கொழும்பு காலி முகத்திடல் போராட்ட களத்தில் ஒன்றுகூடியதுடன்,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்குமாறு விடுத்த கோரிக்கையை அடுத்து அவர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிநேகபூர்வ சந்திப்பொன்றை மேற்கொண்டார்.

Exit mobile version