Site icon Newshub Tamil

மக்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டதாலேயே எனது உடற்பருமன் அதிகரித்துள்ளது – கலாநிதி ஹரிணி அமரசூரிய

பொதுமக்கள் வழங்கும் உணவால் தான் மிகவும் கொழுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹாராம மற்றும் லுணுகம்வெஹர முன்பள்ளி ஆசிரியர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் அதிகளவான உறுப்பினர்கள் போசாக்கனவர்களாக மாறி வருவது, பாராளுமன்றத்தில் உண்பதாலே எனவும் தானும் இரண்டு மூன்று தடவை அங்கு உணவு உட்கொண்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்

ஆனால், கூட்டம் தொடங்கும் முன், கூட்டத்தில் பங்கேற்ற பெண் ஒருவர், தான் கொஞ்சம் கொழுத்திருப்பதாகவும், மக்கள் அளித்த உணவால் தான் அவ்வாறு கொழுத்திருப்பதாகவும் குறித்த பெண் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

Exit mobile version