Site icon Newshub Tamil

அமைதியை நிலைநாட்டுவதற்கு அநுரவின் திட்டம்

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும் தேசிய மக்கள் கட்சியினால் ஸ்தாபிக்கப்பட்ட பிரதேச சபைகள் தொடரும் என அக்கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஒரு கிராமத்தின் அமைதியை பேணுவது பிரதேச சபைகளின் ஊடாகவே மேற்கொள்ளப்படுவதாகவும் அனுர திஸாநாயக்க தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் கல்கமுவிலுள்ள ஜனாதிபதி பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய அநுர கிராமத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கு பிரதேச சபைகள் தொடர்ந்தும் செயற்படும் என தெரிவித்தார்.

நுகேகொடையில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் கே.டி.லால்காந்தவும் இதே கருத்தை முன்வைத்து கிராமத்திற்கு நீதி அதிகாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Exit mobile version