Site icon Newshub Tamil

சுப நேரத்தில் வேட்புமனுவை கையளித்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேட்புமனுவை தேர்தல்கள் ஆணைக்குழுவில் சில நிமிடங்களுக்கு முன்னர் கையளித்தார்.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கையளிக்கும் நடவடிக்கை இன்று (15ஆம் திகதி) காலை நடைபெறவுள்ளதுடன், கட்டுப்பணம் செலுத்திய 40 வேட்பாளர்கள் இம்முறை வேட்புமனுக்களை கையளிக்க உள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்க இந்த ஆண்டு சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதுடன், இந்த ஜனாதிபதித் தேர்தலில் முதன்முறையாக பிணைப் பணத்தை செலுத்திய வேட்பாளரும் ஆவார்.

ஜனாதிபதி விக்ரமசிங்கவுடன் இணைந்து வேட்புமனுக்களை கையளிக்கும் நிகழ்வில் பிரதமரும் கலந்துகொண்டார்.

Exit mobile version