Site icon Newshub Tamil

இலங்கையர்களுக்கு போலந்தில் வேலைவாய்ப்பு

இலங்கை தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட சில துறைகளில் வேலை வழங்குவதற்கு போலந்து அரசு கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையின் கீழ் இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.

போலந்துக்கு விஜயம் செய்த பின்னர் தனது “எக்ஸ்” தளத்தில் பதிவொன்றை மேற்கொண்டு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்தார்.

இலங்கையர்கள் போலந்திற்குள் நுழைவதற்கான விசா வசதிகளை தளர்த்துவது குறித்தும் இந்த விஜயத்தின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தனது கோரிக்கைகள் தொடர்பில் போலந்து வெளிவிவகார அமைச்சரின் பதில்களுக்கு நன்றி தெரிவிப்பதாக வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version