Site icon Newshub Tamil

கொத்து உள்ளிட்டு சில உணவு வகைகளின் விலை குறைப்பு

மின்சாரக் கட்டணக் குறைக்கப்பட்டதை தொடர்ந்து இன்று (16) நள்ளிரவு முதல் சில உணவு வகைகளின் விலைகள் குறைக்கப்படும் என அகில இலங்கை உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் தலைவர் திரு.ஹர்ஷன ருக்ஷான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், சாதாரண சோற்றுப் பொதி ஒன்றின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, ரயிஸ் மற்றும் கொத்துவின் விலை 25 ரூபாவினாலும், பராட்டா, முட்டை ரொட்டி மற்றும் சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளது.

மேலும் தேநீரின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இச்சலுகையை வழங்குவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version