Site icon Newshub Tamil

துப்பாக்கிச் சூட்டில் ‘கிளப் வசந்த’ உட்பட இருவர் உயிரிழப்பு

அதுருகிரிய, ஒருவல பகுதியில் இன்று (08) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பிரபல வர்த்தகரான சுரேந்திர வசந்த எனப்படும் ‘கிளப் வசந்த’ உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரம் குறித்த துப்பாக்கிச் சூட்டில் பாடகி கே. சுஜீவா உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் அதுருகிரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Exit mobile version