Site icon Newshub Tamil

ஜனவரி மாதத்தில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

ஜனவரி மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைத் தாண்டியுள்ளது.

ஜனவரி முதலாம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை 201,687 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 210,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அதன்படி, தொடர்ந்து இரண்டாவது மாதமாக இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைத் தாண்டியுள்ளது.

ஜனவரி மாதத்தில், இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

Exit mobile version