Site icon Newshub Tamil

ஜெரமுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை – மஹிந்த

ஜெரம் பெர்னாண்டோவுடனோ அல்லது அவரது ஆசிரியரான சிம்பாப்வேயின் உபேர்ட் ஏஞ்சலோவுடனோ தமக்கும் தொடர்பில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊபர்ட் ஏங்கல் மற்றும் ஜெரம் பெர்னாண்டோ ஆகிய நபர்களுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக ஊடகங்களில் எழுந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜெரம் பெர்னாண்டோவின் அலுவலகம் விடுத்த உத்தியோகபூர்வ கோரிக்கையின் காரணமாகவே தாம் ஒரு தடவை மாத்திரம் அவர்களை சந்தித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்

பௌத்தம் மற்றும் ஏனைய மதங்கள் தொடர்பில் ஆயர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கு தாம் கண்டனம் தெரிவிப்பதாகவும், நாடுகளுக்கு இடையில் ஒற்றுமையையோ வெறுப்பையோ ஏற்படுத்தும் கருத்துக்களுக்கு இந்த நாட்டில் இடமில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் பிரதமர் மற்றும் புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சராக பதவி வகித்த போது, ​​ஆயர் உத்தியோகபூர்வமாக சந்திப்பை கோரியதாக மஹிந்த தெரிவித்தார்.

சமய அலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் நல்லெண்ணத்தை வளர்க்கும் நோக்கில் சமயத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராயும் நோக்கிலேயே தான் அப்போது முன்னுரிமை அளித்ததாகவும், எனவே இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி கூறுகிறார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில், போதகர்கள் இருவரும் தனக்கும் தனது மனைவிக்கும் பிரார்த்தனை நடத்திய நட்புறவு சந்திப்பு என்றும், உத்தியோகபூர்வ சந்திப்பு என்பதால் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியானது தவிர, அவர்களுடன் தனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

Exit mobile version