Site icon Newshub Tamil

“அது நான் இல்லை” – மஞ்சு

இலங்கை கடற்பரப்பில் எரிந்து நாசமான “எக்ஸ்பிரஸ் பர்ல்” கப்பலின் இழப்பீட்டுத் தொகையில் இருந்து தனக்குக் கமிஷன் கிடைக்கவில்லை என்று மஞ்சு நிஷங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறானததொரு குற்றச்சாட்டை தன்மீது சுமத்திய இங்கிலாந்திலிருந்து செயற்படும் இணையத்தளத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காகவே தான் அந்த நாட்டுக்குச் சென்றதாக உலகளாவிய இலங்கை காங்கிரஸ் தலைவர் மஞ்சு நிஷங்க கட்டுநாயக்க விமான நிலையத்தி வைத்து இதனை தெரிவித்தார்.

சாமர குணசேகர என்ற நபர் கப்பலில் இருந்து இலங்கைக்கு வழங்கப்பட வேண்டிய நட்டஈட்டைத் தடுப்பதற்காக நிறுவனத்திடம் இருந்து கமிஷன் பெற்றதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

அங்கு சாமர குணசேகர எனும் மஞ்சு நிஷங்க என்று இங்கிலாந்தில் இருந்து இயங்கும் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக 05 நாட்கள் லண்டனில் இருந்ததாகவும், அந்த நடவடிக்கைகளை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இலங்கை திரும்பியதாகவும் மஞ்சு நிஷங்க தெரிவித்தார்.

இந்த அறிக்கை பொய்யானது என்பதை ஒப்புக்கொண்ட அவர், லண்டன் நீதிமன்றம் பகிரங்க அறிக்கையை வெளியிடும் என்றும், இந்த வழக்கை தாக்கல் செய்வதன் மூலம் தனது நற்பெயருக்கு ஏற்பட்ட கலங்கத்திற்கு இழப்பீடு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கிறேன் என்றார்.

மஞ்சுள நிஷங்க இதனை குறிப்பிட்டுள்ள போதிலும் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் சாமர குணசேகர எனும் மஞ்சுள நிஷங்க என்றும் அவர் நாலக கொடஹேவா எம்.பி.யின் சகா என்றும் வெளிப்படுத்திய பின்னர் அது அவர் இல்லை என மிகவும் ஆவேசமாக கூறினார்.

Exit mobile version